Posts

Showing posts from April, 2022

பத்ர் தரும் படிப்பினை - மஷுரா

Image
 பத்ர் தரும் படிப்பினை 2 மஷுரா மார்க்க விவகாரங்களில் ஆலிம்களுடனும், உலக விவகாரங்களில் குறித்த துறையில் ஆற்றல் உள்ளவர்களிடமும் ஆலோசனைச் செய்வது அழ்ழாஹ்வின் உதவியும், உலகியல் விவகாரங்களில் நன்மை நடப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் . நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ர் யுத்தத்திற்கு முன்னர் ஸஹாபாக்களிடம் ஆலோசனைக் கேட்டார்கள். தாம் விரும்பும் முடிவை சில ஸஹாபாக்கள் முன் வைத்தும்கூட அவர்கள் திடீர் முடிவு செய்யாது அன்ஸாரிகளின் முடிவை அறியும் ஆர்வத்தில் தொடர்ந்தும் ஆலோசனைச் செய்தார்கள். அவர்களின் ஆலோசனையும் சாதகமாக அமைந்த பின்னரே யுத்தம் செய்யும் முடிவை எடுத்தார்கள். இது ஆலோசனை செய்வதின் அவசியத்தை உணர்த்துகின்றது. மேலும் பத்ர் களத்தில் நடந்த இன்னொரு சம்பவமும் மஷுராவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பத்ர்’ களம் சென்று மதீனா பகுதிக்கு நேராக இருக்கும் முதலாவது கிணற்றுக்கருகில் தமது கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.  அப்போது ஹுபாப் இப்னுல் முன்தீர் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள், ‘அழ்ழாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நாம் கூடாரமிட வேண்டு...

பத்ர் தரும் படிப்பினை - 1

Image
 பத்ர் தரும் படிப்பினை 1 துஆ ஆசைப்பட்ட ஹபீப் வாயைத் திறந்து கேட்காமலேயே வெறுமனே வானத்தை அடிக்கடி பார்த்ததால் அக்ஸாவிலிருந்த கிப்லாவை கஃபாவிற்கு மாற்றிய ரப்பு பத்ரிலும் ஏதாவதொரு வகையில் கேட்காமலேயே உதவி செய்திருக்கலாம். ஆனால் அழ்ழாஹ் அவ்வாறு செய்யவில்லை! பெரும் ஒரு முயற்சிக்கு முன்னர் துஆவின் அவசியத்தை ரப்பு ஏற்படுத்தினான். ஆம்! பத்ரின் வெற்றிக்குப் பின்னால் நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணீரால் நிரம்பிய ஸுஜுத்கள், சிறு குழந்தைப் போன்று அழுது அடம்பிடித்த துஆக்கள் போன்றனவும் இருந்தன. நபிகளார் அழுததால் ஏற்பட்ட உடல் அசைவினால் அவர்களது தோலில் போட்டிருந்த போர்வை கீழே விழ, அபூபக்ர் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் அதை எடுத்து அவர்களின் தோலில் போட்டவாறு ஆறுதல் கூறியது ஹதீஸில் பதிவாகியுள்ளது. துஆக்கு பின்னரே அழ்ழாஹ் 3000/ 5000 வானவர்களை அனுப்பி வைத்தான். "ஜிப்ரீல், மீக்காஈலோடு பெரிய மலக்கான இஸ்ராஃபீலும் வந்துள்ளார்" என்றார்கள் நபிகளார். மேலும் அபூபக்ர் மற்றும் அலி ரழியழ்ழாஹு அன்ஹுமா ஆகிய இருவரிடமும், "உங்களுடன் ஒவ்வொரு மலக்குகள் உள்ளனர்" என்றார்கள். ஸஹாபாக்கள் வாளை வெறுமன...