Posts

Showing posts from July, 2021

திஹ்யதுல் கல்பி றழியழ்ழாஹு அன்ஹு

Image
  திஹ்யதுல் கல்பி றழியழ்ழாஹு அன்ஹு - மதீனாவைச் சேர்ந்தவர்கள். - அழகான தோற்றத்தைக் கொண்டவராக இருந்ததால் அழகுக்கு உதாரணம் காட்டப்பட்டவர்கள். - கைஸர் மன்னருக்கு தூதுவராக அனுப்பி வைக்கப்பட்டவர்கள். - டமாஸ்கஸ்ஸில் வசித்து வந்தார்கள். - நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உம்மு ஸலமா றழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு மனிதரின் தோற்றத்தில் வந்தார்கள். மேலும், நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஸலமா றழியழ்ழாஹு அன்ஹா அவர்களிடம், 'இவர் யார்?' என்று கேட்க, அவர்கள், 'இது திஹ்யா' என்று பதிலளித்தார்கள். அப்போது அது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாம்' என்று உம்மு ஸலமா றழியழ்ழாஹு அன்ஹா அவர்களுக்கு தெரியாது. பின்னர் உம்மு ஸலமா றழியழ்ழாஹு அன்ஹா அவர்கள், 'அழ்ழாஹ்வின் மீதாணையாக! நான், நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னதாகத் தம் உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா கல்பீ அவர்கள் தா...

ஹன்ழலா இப்னு அபூ ஆமிர் றழியழ்ழாஹு அன்ஹு

Image
 மலக்குமார்கள் குளிப்பாட்டிய ஹன்ழலா இப்னு அபூ ஆமிர் றழியழ்ழாஹு அன்ஹு - மதீனாவைச் சேர்ந்தவர். - "அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா" எனும் திண்ணைத் தோழர்களில் ஒருவர். - திருமணம் முடித்து அடுத்த நாளான உஹதுடைய தினத்தில் வீரதீரமாகப் போரிட்டு ஷஹீதானவர்கள். ஹன்ழலா றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் திருமணம் முடித்து, முதலிரவையும் சந்தோஷமாகக் கழித்து உறங்கிக் கொண்டிருக்கும்போது, நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஹத் போருக்கு அழைப்பு விடுக்கும் பறை ஓசையைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தார். உடலுறவுக்குப்பின் ஃபர்ழான குளிப்பைக் குளிப்பதற்கும் அவருக்கு நேரமில்லை; அவகாசமில்லை. ஃபர்ழான குளிப்பைக் குளித்தால் நேரமாகி விடும் என்பதனால் குளிக்காமலேயே கடகடவென கவசம் தரித்தார்; ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டார்; போர்களத்திற்குப் பாய்ந்தோடினார். வெற்றி வாகை சூடி விட்டு திரும்புவார்கள் என எண்ணி அவரது மனைவியும் சந்தோஷமாக வழியனுப்பிவைத்தார். ஹன்ழலா றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் களத்தில் குறிவைத்தது, குறைஷிப் படையின் தலைவன் அபூஸுஃப்யானை. படையின் தலைவன் என்பதால் அபூஸுஃப்யானைச் சுற்றி பாதுகாப்பு வளையம் பலமாய் இருந்தது. தவிர அபூஸுஃப்யான்...

ஃகப்பாப் இப்னு அரத் றழியழ்ழாஹு அன்ஹு..

Image
 ஃகப்பாப் இப்னு அரத் றழியழ்ழாஹு அன்ஹு - இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முதல் உம்மு அன்மாரின் கொல்லன் பட்டறையில் வாள் செய்து கொண்டிருந்தவர்கள். - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆறாவது நபர். "ஃகப்பாப் ஒரு காலத்தில் இஸ்லாத்தில் ஆறில் ஒரு பங்கு" என்று பெருமையாகச் சொல்லப்பட்டது. - ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக கொடூரமான முறையில் வேதனைச் செய்யப்பட்டார்கள். • அடித்தார்கள்; உதைத்தார்கள். • பட்டறையில் இருந்த இரும்புச் சாமான்களை எடுத்துத் தாக்க ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் சுயநினைவற்றுக் கீழே விழுந்தார்கள். • காஃபிர்கள் கற்களை நெருப்பில் இட்டுச் சுடுவார்கள். தீ கொழுந்து விட்டு எரிந்து, அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருப்பார்கள். பின்னர் ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் உடைகளைக் கழற்றி விட்டு, அந்த நெருப்புக் கங்குகளின்மேல் அவர்களைப் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பார்கள். அவர்களின் முதுகு சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழும். அவர்களின் காயத்திலிருந்து வழிந்து விழும் நீரினால் அந்தத் தீ அணையும். • எஜமானி உம்மு அன்மார் பட்டறைக்க...